Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடல்நல பாதிப்பு உள்ள நிலையில் மேலும் மனச்சோர்வு ஏற்படுவதால் சிகிச்சை பெற அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றப்போது, அதில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிகாந்துக்கு திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் கூட ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காணப்பட்டது. ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகரித்ததால் அதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டார். ரஜினி தொடர்ந்து 10 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் சூழலுக்கு அவர் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
ரஜினிகாந்த் ஏற்கனவே அமெரிக்காவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர். பொதுவாக இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு சாதாரணமாகவே நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம். இந்நிலையில் ரஜினிக்கு தொடர்ந்து மனச்சோர்வு பிரச்சினை இருந்துவருகிறது என்று கூறப்படுகிறது.
ரஜினியின் அரசியல் முடிவுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதனால் ரஜினி கடந்த சில நாட்களாக மனச்சோர்வு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உடல்நல பாதிப்பு உள்ள நிலையில் மேலும் மனச்சோர்வு ஏற்படுவதால் சிகிச்சை பெற அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.